சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி காவல் நிலையத்தின் அருகே அண்ணனின் வீடு புகுந்து 40 பவுன் நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிய அவரது தம்பியை புவனகிரி போலீஸார் கைது செய்து நகைகளை மீட்டனர்.
புவனகிரி காவல் நிலையத்தின் எதிரில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் பிரேமநாதன் (62). வீட்டின் முன்புறப் பகுதியில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே வீட்டில் மற்றொரு பகுதியில் இவரது தம்பி முரளிதாஸ் (52) தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
முரளிதாஸ் கடந்த ஒரு மாதமாக கடன் தொல்லையால் வெளியூரில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்ணன் பிரேமநாதன் குடும்பத்துடன், முரளிதாஸ் மனைவியையும் அழைத்துக் கொண்டு திங்கள்கிழமை காலை கீரப்பாளையம் அருகே உள்ள வடப்பாக்கத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்று மாலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவிலிருந்த 40 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்து அதிர்ச்சியுற்றார்.
இது குறித்து புகாரின் பேரில் புவனகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் சந்தேகத்தின் பேரில் செல்போன் மூலம் தம்பி முரளிதாஸை தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பாகம் பிரிக்காததாலும், கடன் தொல்லை தாங்க முடியாமலும் நகைகள் மற்றும் ரொக்கத்தைத் திருடியதை முரளிதாஸ் ஒப்புக் கொண்டார். அதன் பேரில் போலீஸார் முரளிதாஸை கைது செய்து, நகைகளை மீட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

